ஒரே கனா

தகிக்கும் மதியத்தில்
ஒரு குவளை நீருக்கு
காத்திருக்கும்
அவனது தொண்டைக்குழிக்குள்
கனன்று எரிந்தபடி இருக்கிறது
ஒரு நெருப்புக் கனவு.
தன்னை நோக்கி சிரிப்பவர்களை
புன்னகையுடன் கடந்து செல்கிறான்.
மாற்றத்தின் வசந்த பாதைகளை
தனியனாக
அவனே தகவமைக்கிறான் .
விரக்தியின் விழிகளை
மறைத்து
எப்போதும் போல புன்னகைக்கிறான்.
இப்போதைக்கு
சுரக்கும் உமிழ்நீரை
விழுங்கிக் கொள்கிறான்
கொஞ்சம் குளிர்ந்து
மீண்டும் கனல்கிறது
அந்த ஒரே கனா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு

நானொரு மகிழ்பரி