தாவணி தேவதை
நேர் வகிடெடுத்து தலை வாரி நெற்றியில் சாந்திட்டு கனகாம்பரங்களும் செம்பருத்திகளும் சூடி... பாந்தமான அழகியல் கொஞ்சும் கண்களும் எண்ணை வழிந்த முகமெனினும் எழில் இனிப்பாய் சிரிப்பும்... நெற்றி சுருக்கி சற்றே தலையசைத்து விட்டு ஓடிச் செல்லும் வெட்க சிந்தலும் நிதான நடையின் சிதறா கவனம்... இளஞ்சிவப்பு பச்சை ஊதா என கிராமியத்தின் வண்ணங்களில் கலரிடும் கனவுகளை சுமந்த தாவணிகளை... தவறி மறந்தே இறக்கடிக்கபட்டு விட்டனவோ தமிழ் தேவதைகளின் முதல் அடையாளம்-தாவணி... தற்பொழுது பண்டிகைகளிலும் தேர் திருவிழாக்களிலும் ஆங்காங்கே தோன்றி மறையும் தோற்ற மயக்கங்களாகிப் போயின... -ஈ.பிரபாகரன். சமர்ப்பணம் இன்றும் தாவணியை உடுத்தியிருக்கும் கிராமத்து கன்னி தேவதைக்கும்... என்றோ தாவணியை நினைவுகூறும் நகரத்து நளின தேவதைக்கும்.....