இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பிருந்தாகுட்டியும் சிருங்கார புன்னகையும்  😍 யாரும் என்னைப்பற்றி  உன்னிடம் சொல்வதற்கு முன்பே  உனக்கு எல்லாமும்  தெரிந்து தான் இருந்தது. இருந்தபோதிலும் எதுவுமே தெரியாதது போல் இருக்க ஒவ்வொரு முறையும் என்னை ஏமாற்றுவதாய் நினைத்து ஒரு குழந்தையை போல நீ செய்யும் பிரயத்தனங்களை பார்க்கையிலெல்லாம் தவறு செய்து மாட்டிக்கொண்ட பிறகு தாயின் பின் சென்று எட்டிப்பார்த்துக்கொண்டே நாக்கை துருத்தியபடி கண்களை பொத்தி முகம் மறைக்கும் பிருந்தா குட்டியைப் போல மலரும் சிருங்கார புன்னகையை உதிர்க்கும் உனது முகமே போதும் எனக்கு இனி மீண்டும் இப்படி எல்லாம் நிகழப் போவதில்லை என்று தெரிந்து தான் எழுதி கொண்டிருக்கிறேன் இதை * நான் இப்போது நிலம் பார்த்தபடி  ஒரு நிச்சலனத்தில்  அப்படியே இருக்கிறேன்.  எனக்குள் சுழலும் வர்ணங்களின் மாயமாகிய சின்னஞ்சிறு அன்பினையெல்லாம்  என்னால் மட்டுமே உணர முடியும்;  ஆனால் எல்லா வசந்தங்களும் எப்போதும் என்றைக்கும் அப்படியே இருப்பதில்லை அல்லவா? அப்படித்தான் உங்களுக்கெல்லாம் நான் இப்போது ஒரு உண்மையைச் சொல்லப்போகிறேன். நிஜத்தில் என் மகிழ்வின் நிச்சலனச் சக்கரம் எப்போதோ சுழற்சியை நிறுத்தி விட்ட