இடுகைகள்

நவம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மற்றுமொரு மழை நாளில்

பால்யத்தின் என்றோ ஒரு அந்திமாலையில் மழை பெய்து முடிந்து கொஞ்சம் கொஞ்சமாய் காற்றின் குளிர் கசியும் அந்த ரம்மியமான இரவில் மொட்டைமாடியில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்கையில் நிலா பாவம் ல யாருமே பக்கத்துல இல்லையென்று பாவமாய் முகத்தை வைத்திருந்த சுசீலாவும் அவளின் பரிதவிப்பும் தான் சட்டென ஞாபகத்திற்கு முதலில் வந்தது இன்று நிலா பார்க்கையில் புன்னகைக்கையில் மலரும் அவளின் முகம் போலவே இருந்தது நிலாவின் அந்த பிரகாசம் சுடரும் ஔியில் சுற்றிலும் இருக்கும் தீரா இருளாய் நீள்கிறது நம் பால்யக் கதையின் அத்தியாயங்கள் அவ்வளவு பிரியங்களையும் இன்னும் சுமந்து அலைந்து கொண்டிருக்கும் வானமாய்.