இடுகைகள்

டிசம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இராஜா-இராணி இராஜ்ஜியம்

இன்னும்  காற்றில் காதல்  சண்டைகளிட்டும்; சிறு வெண்பூவிடம்  காலாற இதழ்  கதைத்துமாய்   இயற்கை  இராஜ்ஜியம் இழந்தும்  வாழ்ந்து கொண்டுதான்  இருக்கிறது  ராஜா-ராணி பட்டானும்;  அந்திப்பொழுதின்  மஞ்சள் வானமாய்  வெட்கம் சிந்தும்  ஒற்றை ஆரஞ்சு பட்டானும்;  நேற்றையது போல  ஒ ரு   தினத்தில்  உன் கைகளால்  பறக்கவிட்டதைப்போல...  ஈ.பிரபாகரன்.

பெயரிடா பதிவு

மின்சார துண்டிப்பால்  பாதியில் விடுபட்ட  நேற்றைய உரையாடல்கள்... எப்படியோ தேடி  கண்டுபிடித்து தன்   நட்பை பெற  வேண்டி காத்திருக்கும்  பள்ளிப் பருவ தோழி... முந்தைய பதிவிற்கு  எப்போதும் போலவே  அனிச்சையாய்  விருப்பம்  தந்த கல்லூரி நட்பூக்கள்... நீயெப்பட திருந்தப் போற என சலித்துக்கொள்ளும்  இதுவரை பார்த்திரா  என்றும் நலம்விரும்பும்  தொலைதூர அண்ணனொருவன்... ஏன் இந்நேரமாகியும்  முக உரையாடலிணைப்புக்கு  விழி விளித்தழைத்து வரவில்லையென  காத்திருந்து;   பின் ஊடலில்  "கோச்சுகிட்டேன் போடா"  என செய்தி அனுப்பிவிட்டு  என் உபரி பிரதிபதிலுக்கு         இலவசமாய் இரு  புளிப்பு  மிட்டாயுடன்  நாளை சந்திக்க வா வென  வசமாய் அன்பெய்த   காதலி...  இவர்களுக்கு இப்போது  தெரிய வாய்ப்பில்லை  விபத்தில் சற்றுமுன்  சிதைந்து  பிரிந்த   என் உயிர் பற்றி... நாளையோ.. பின்னொரு நாளிலோ...  யாரோ  ஒரு தோழன்/தோழியால்  பகிரப்படும் என் புகைப்படம் R.I.P என்றோ  We Miss You என்றோ... அதுவரை,  வரும் செய்தி தகவல்கள். நட்பு வேண்டுக