மருளும் அவனின் விழிகளைப் பார்த்து திரளும் இவள் புன்னகை
விளையாட்டு பொம்மையென அந்தி மஞ்சள் சூரியனை உடைத்தெறிந்த பின் சிதறி கிடப்பது மாதிரி தெரு முழுவதும் மாநகராட்சி விளக்கின் மஞ்சள் வெளிச்சம் நிறைந்து கிடக்க,. டொரண்டினோவின் கில் பில் படத்தில் வரும் ஒரு காட்சியைப்போல நிசப்தம் கசியும் அந்த குறுகலான தெருவின் நடுவில் கொஞ்சமும் கலவரமில்லாமல் அவள் தனியாக நடந்து போய்க்கொண்டிருக்கிறாள். வெதுவெதுப்பாக ஒரு குழி தோண்டி அதில் படுத்திருக்கும் நாயின் கண்களை கூர்ந்து கவனித்தவாறே மெதுவாக கடக்கிறாள் அந்த தெருமுனையை. அவள் சூடியிருக்கும் மலர்களின் நறுமணத்தினை அந்த நாயின் புலன்கள் நுகர்ந்தபின்னும் அவளை நோக்கி திரும்பாமல் எவ்வித அசைவையும் வெளிக்காட்டிகொள்ளாமல் அப்படியே விழிகள் உறைந்த மாதிரி சுகமாக படுத்துகிடந்தது. பொழுது, இப்பொழுது மெல்ல அதிகாலையாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்கிறாள். சப்தமில்லாமல் அவனின் அறைக்கதவினை திறந்து உள்தாழிட்டுவிட்டு கண்களில் சற்று பதற்றத்துடன் மிக ஜாக்கிரதையாய் கைகளின் பின் அதனை மறைத்தபடி மெதுவாக அவனை நெருங்குகிறாள். இன்னமும் நீளும் அவனின் இரவின் கனவுகளில் இரத்தம் சொட்டச் சொட்ட அவனை நோக்