சுசீலாவிற்காக எழுதிய கடிதத்தின் பாதி-II
இது போல ஒரு மாலைப்பொழுதினில். எங்கள் பழைய வீட்டின் முன்னிருந்த இன்னமும் என் நினைவுச்சில்லிலிருந்து ஞாபகத்திற்கு வர மறுக்கும் அந்த மரத்திலிருந்த பூவினை அவளின் மருதாணி விரல்களால் என் கைகளைப்பிடித்து எல்லா விரல்களுக்கும் பூ நகங்கள் வைத்த உடன் நான் 'தம்ராஜ் கில்விசனாய்' மாறி இருள் நீடிக்கின்றது என்று நான் சொல்லிய போது, கன்னங்கள் சிவக்க அவள் சிரித்தது அப்படியே காட்சியாய் விரிந்தது ஷக்திமானை பற்றி பேசிக்கொண்டிருந்த இன்றைய மதிய வேளையினில்.. இரவுகளின் ரம்மியமாய் கனவு விழியின் ஓரத்தில் அரும்பிய பின்னொரு சமயத்தினில் மணல் துகள்களில் காந்தச்சில்லுகளைத்தேடி பேய் துறத்தி விளையாடியதில் கிடைத்த அரிதான பேய்களை பற்றி அவளால் சொல்லப்பட்ட கதையில் ஒன்றான ஒற்றைக்கால் கருப்பி இன்னமும் என்னுள் வந்து போகிறாள் அவளை நலம் விசாரித்ததாய் சொல்லச்சொல்லி..