<3 ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரமொன்றில் பேருந்துக்காக காத்திருக்கையில் உன்னைப்போலவே ஒருத்தியை பார்த்தேன் அதுவல்ல ஆச்சர்யம், முதல்முறை நீ கேட்டது போலவே அவளும் சின்னச்சின்ன முகபாவனைகளுடன் கண்களில் தயக்கத்துடன் மெல்ல கேட்டால் உன்னைப்போலவே, கண்ணகிநகர் பஸ் வந்தா கொஞ்சம் சொல்றிங்களா? என்று அதுதான் ஆச்சர்யம் <3 மஞ்சள் கொன்றைப்பூக்கள் சிதறிக்கிடக்கும் மழைநின்ற அந்த ஈரச்சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறாய். அவ்விடம் கொஞ்சம் கொஞ்சமாய் தேவதை வீதியாக மாறத் துவங்குகிறது <3 இப்போதைக்கு அந்தப்பூக்களை நீ எதுவும் செய்துவிட வேண்டாம். உன்னைப்பார்த்த வெட்கத்தில் தான் மலர்ந்திருக்கிறது கொஞ்சம் மணம்விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும் <3 பூங்கா பூட்டப்பட்ட பின் வெளியே இருக்கும் நிழல் மரத்தில் சாய்ந்தபடி இருவரும் கைகள் கோர்த்து விடைபெற மனமின்றி இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் நீளாதவென பேசிக்கொண்டிருந்த அந்த சில நிமிடங்களின் காட்சி திரும்பத் திரும்ப வந்து போகிறது கனவில். <3