வண்ணத்துபூச்சி வாசல்
#பட்டாம்பூச்சிகளை பிடிக்கும் எனக்கு. பிடிபடாமல் சுதந்தரித்திருக்கையில்... #பூக்களுடன் மட்டுமே இதழ் முத்தங்களை பகிர்ந்துகொள்கிறாய்... # வண்ணப்பூக்களில் அமர்ந்து கதை பேசுகையில்; நாளை நான் இறக்கையில் என் மீது நீ விழுந்து அழுவாயா என சிறகடித்து கண் சிமிட்டுகிறாய்... #வாசனையற்ற பூக்களின் மனம் யாவும் உனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்... #மகரந்த துகளினை தூவி தினம் புதிதாய் பூக்கோலம் இடுகிறாய்... #நீ மட்டும் தான் வண்ணங்கலந்த உயிர்; வாழும் ஓவியம்... #சிறுவர்-சிறுமிகளுக்கெல்லாம் உன்னைப் பிடிக்க பிடித்திருக்கிறது; #ஜனநாயக நாடாம்; நாங்கள் இருக்கும்வரை இயற்கை பூவுலகை எங்கள் ராஜா ராணி தான் ஆளவேண்டும் சூளுரைத்தது பட்டான் படை :) #எல்லா விதமான வண்ண சட்டையிலும் மிடுக்காய் மிளிர்கிறாய்... #தொட்டாலே ஒட்டிக்கொள்கிறது உன் கலர் என் கைகளில்... -ஈ.பிரபாகரன்.