வாழ்க்கையில சில விஷயங்கள் அப்படித்தான்! சில பேர காரணமே இல்லாம பிடிச்சு போகும்.அவர்கள் என்ன செய்தாலும் ரசிக்க தோணும்.இந்த மாதிரி ஆதி அந்தமற்ற அன்புக்கு கட்டுப்பாடு, ஒரு வரையறை இவையெல்லாம் கிடையாது.அது இறுதிவரை சொல்லப்படாமலும் போகலாம்.ஆனால் என்றும் மறையாத பிரியத்தை பெறுவதற்கு நம்மில் எத்தனை பேர்க்கு வாய்த்திருக்கிறது... உமா நடந்து வருகையில் விளக்குகள் துளிர் விட துவங்கி இருந்தது.கண்களில் மின்னி எதிர்பட்டது மாநகரின் ஒரு பெரும் ரெஸ்டாரண்ட். அதைச் சுற்றிலும் கண்ணாடி சுவரில் நீர் வழிந்து மெல்லமாக மங்கிக்கொண்டிருந்தது மாலையெனும் பொழுது. உள்ளே சீரான இடைவெளியில் கைகளில் கோப்பையுடன் இன்றைய நவீனத்தின் முகங்கள் ஜோடியாக அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கடந்து சென்றாள். அவளுக்கு அது ஒன்றும் பெரிய பிரம்மிப்பை ஏற்படுத்திவிடவில்லை. அது எப்போதும் போல வழக்கமான காட்சி தான். சட்டென ஏனோ தானாக சிரித்துக்கொண்டாள். அதன் பின்னூட்டங்களில் ஒளிந்திருப்பவன் கதிர். ஆமாம் உமாவுக்கு கதிர் மேல் பெயரிடா பிடித்தம் இருந்தது. ஏன் என்றால் தெரியாது. அது அப்படித்தான் காரணமெல்ல