இடுகைகள்

ஜூன், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துளி மழை

கொஞ்சம் தாமதித்தே வந்திருக்கலாம் நான்; இதேபோல மாலைநேர பொழுதொன்றில் சாலையோர நிழற்குடையில் நிற்கையில்; கடைசியாக அவள் தோள்சாய்ந்து கைகள் பற்றி பார்த்த மழை ஞாபகம் வராமலாவது இருந்திருக்கும். ஒளிரும் விளக்குகள் எத்தனை என எண்ணிப்பர்த்ததும்; பின் மழை நின்ற சாலையில் இருவரும் நடக்கையில் ஈரத்தின் குளிர்காற்று கொடுத்த வெதுவெதுப்பு இன்னமும் உறைந்திருக்கிறது என்னுள்; இடது விழியின் ஒரு ஓரமாய் என்னை எப்போதும் நீ திரும்பிப்பார்ப்பதை போல ஒரு சிறு ஞாபகமாய் வந்துபோகிறது இந்த மழை இரவு...

சாலையோரம்

அந்தி மஞ்சள் மாலையை கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருந்ததது நிர்மலமான நீல மேகங்கள்... கண் மூடித் திறப்பதற்குள் கடந்து சென்ற வாகனங்களை எண்ண தோன்றவில்லை... அவசரங்களின் சந்தோஷங்களிலேயே பழகியவர்களை எதுவும் செய்துவிட முடியாது... எழுதி முடியும் முன்னே என்னமோ தொலைந்து விட்டதை தேட வந்ததுபோல அருகில் வந்து சுற்றிக்கொண்டிருந்தது ஒரு வெள்ளை நாய்... சற்று நேரம் கழித்து என்னிடம் வந்து, நீ பார்த்தாயா? என்று கேட்பதைப்போல என்னை பார்த்தது... யாருக்கு தெரியும் இவ்வளவு வேகத்தில் பயணிக்கும் இவர்களுக்கு மத்தியில் மெல்ல நடக்க ஆசைப்படும் என் இந்த சின்ன பிரியத்தை போல அதற்கும் ஏதேனும் ஒரு பிரியம் தொலைந்து இருக்கலாம்... எழுதிக் கொண்டிருக்கும் என்னை வேடிக்கை பார்த்து கடந்து செல்பவர்களை அவர்களை மாதிரி என்னால் வித்தியாசமாய் பார்க்க முடியவில்லை... சொல்லப்போனால் எனக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் பிடித்து இருந்தது... இரண்டு யுவதிகளுடன் வலது ஓரத்தில் நடந்து செல்லும் ஒருவன் ஏதோ சொல்ல, திரும்பி பார்க்கும் இருவரும் தங்களுக்குள் ஏதோ சொ