துளி மழை
கொஞ்சம் தாமதித்தே வந்திருக்கலாம் நான்; இதேபோல மாலைநேர பொழுதொன்றில் சாலையோர நிழற்குடையில் நிற்கையில்; கடைசியாக அவள் தோள்சாய்ந்து கைகள் பற்றி பார்த்த மழை ஞாபகம் வராமலாவது இருந்திருக்கும். ஒளிரும் விளக்குகள் எத்தனை என எண்ணிப்பர்த்ததும்; பின் மழை நின்ற சாலையில் இருவரும் நடக்கையில் ஈரத்தின் குளிர்காற்று கொடுத்த வெதுவெதுப்பு இன்னமும் உறைந்திருக்கிறது என்னுள்; இடது விழியின் ஒரு ஓரமாய் என்னை எப்போதும் நீ திரும்பிப்பார்ப்பதை போல ஒரு சிறு ஞாபகமாய் வந்துபோகிறது இந்த மழை இரவு...