ஒரு மழைமதியப்பொழுதில்
மதிய வெயிலை உதிர்த்து மழையாய் தூவுகிறது நீலமற்று மெதுவாய் நகரும் கார்முகில் தார்ச்சாலையில் விழுந்துடையும் மழை முத்தத்துளிகள் வெப்பச் சூட்டில் உடனுக்குடன் நிலைகுலைந்துபோகின்றன சாலையெங்கும் வண்ணவண்ணமாய் சட்டென திறக்கிறது மழைக்குடை காளான்கள் நிறுத்தத்தில் நிற்பவர்களின் நெருக்கம் அதிகரித்துகொண்டே இருக்கிறது கணிசமாக. கொஞ்சமாய் நனைந்ததில் குளிர் பரவ இதழ்கள் :ஷ்" ஷெனவாகி பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன, சைக்கிளை டீக்கடை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளங்கைகளை தேய்த்துக்கொண்டே அண்ணா ரெண்டு?, உனக்கு டீயா? காபியா? "டீ" என்றதும் "ஸ்ட்ராங் ஆ ரெண்டு டீ" என்றாள் சுசீலா.