காற்று-வழி
* தனல் ஜுவாலையின் சிவப்பினில் இருந்து மஞ்சள் நிறமிழந்து கரியமாய் மாறி காற்றினில் கரைந்து போய்க்கொண்டிருக்கிறது தடயங்கள் எல்லாமும். * ஊதல் காற்று செய்யும் ஊடல் நீ தெளிக்கும் வெட்கத்தில் சிவந்து மஞ்சள் உமிழும் மாநகர விளக்கின் கீழ் சிலிர்ந்து செல்கிறது உனை கடந்து. * தூரத்தில் வரும் சுழல் காற்று உன் கற்றை குழல் கலையாமல் இருக்க வேண்டி சட்டென நிலைகுழைந்து சுழியமாகிறது உன் விழிகளின் கலவரம் உணர்ந்து. * நீ உன் ஈரக் கூந்தல் உலர்த்துகையில் காற்றில் சிறு சாரல் ஒன்று அரும்பி சில்லென கனம் குறைந்து குளிர் இறங்குகிறது காட்றதன் உஷ்ணத்தின் உள்ளே. * இரவின் விழியில் காற்றின் அலை குறைவதே இல்லை எப்போதும் ரீங்காரமிடும் பாடலைப் போல அது ஒலித்துக்கொண்டே இருக்கும்.