காதல் பரிட்சை
அன்று தேர்வு நாள் அவசர அவசரமாக படித்து கொண்டிருந்தேன்; ஆசிரியர் முக்கியமென சொல்லிய கேள்விகளுள் முதல் கேள்விக்கான பதிலை படிக்க ஆரம்பிக்கும் முன்னரே முற்று பெற்றது மணி ஓசையால்... அனைவரும் அவரவர்க்காய் ஒதுக்கப்பட்ட இடத்தினில் அமைதியாய் அமர்ந்தோம்; ஜன்னலோரம் என்பதாலோ என்னவோ பயம் வியர்வையாய் வெளியேறுவதை சற்று தாமதபடுத்திக் கொண்டிருந்தது... வெண்மையான விடைத்தாளும் விடை தெரியா வினாத்தாளுமாய்; நிசப்தமாக நகர்ந்து கொண்டிருந்தது என்னுடைய நிமிடங்கள்; நீ உள்ளேவர அனுமதி கேட்கும் முன்பு வரை... பதட்டத்துடன் எழுத துவங்குகிறாய், மின்விசிறி இல்லா வகுப்பறையில் உனக்காக இறக்குமதி செய்யபடுகிறது தென்றல் காற்று நம் திசைநோக்கியே... ஏதேனும் எழுதுவோம் என்ற முடிவுடன் எழுத ஆரம்பித்தேன் முதல் பக்கத்தினை; இடைமறித்து நிறுத்தப்பட்டதென்னுடைய எழுத்துக்கள் பேனா மையின்மையால்... என்ன செய்வதென எண்ணுகையில் சற்று தயங்கி உனை விழிக்க; எதிர்பாராமல் எதிரிட்டது உன் கை பேனாவுடன் எனை நோக்கியே... எளிய புன்முறுவலுடன் வாங்கி கொண்டு, முதல் மதிப்பெண் பெறுவோருக்கு பேனா பரிசளிப்பதாக ஆசிரியர் சொல்லிய