மழை நாட்கள்
ஊதா நிற குடை பிடித்து நாணத்தால் நனைத்துவிட்டு; நடந்து செல்கிறது எனக்கான மழை. உன்னுடன் பேசத்தான் உடைந்து விழுகிறது ஊடல் துளிகள். எல்லா துளியிலும் என்மேல் விழுகிறது உனக்காக தூவும் காதல் மழை பூக்களாய். நீ விட்டுசென்ற மௌனங்களை முத்தமிட்டு நிரப்புகிறது மழை. ஆம் எல்லோரும் நனைந்து போகிறார்கள்; நீ மட்டும் தான் நனைத்துவிட்டு போகிறாய். ஈ.பிரபாகரன்.