இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவு நாடா

நீங்களே எல்லாமுமாய் இருந்துவிட்டுப் போங்கள்... நான் ஏதுமற்றவனாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன்... மறக்கவே நினைக்கிறீர்கள் எனில், எதற்காக நினைவுகளை விதைக்க முற்படுகிறோம்... தொலைந்துபோன புத்தகத்தின் கிழிந்த பக்கங்கள் மட்டும் கிடைத்து என்னவாகிவிட போகிறது இனி... ஞாபகங்களின் பெருமழை பொழுதினில் நனையாத நாட்கள் எனக்கானதாய் இருந்து விடுகிறது... எல்லா நிஜமும் கேட்கப்படுவதில்லை எப்போதுமே... என்னுடையதும் அப்படியான ஒரு சொல்லப்படாத முழு வெளிச்சத்தை போன்ற ஒரு புள்ளி ஒளித்துகள் தான். -ஈ.பிரபாகரன்.