இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெ(ா)ய்யும் மழை

படம்
* மழை நாட்களில் பூக்கும் பூக்கள் யாவும் உன் வெட்க்கத்தின் உதிரிகள் * நீ நிற்கும் நிழற்குடை மட்டும் நந்தவனமாகி போகிறது எப்போதும். புன்னகை பூக்களை நீ உதிர்த்து கொண்டே இருப்பதால்! * தாமதித்து வந்து வகுப்பறைக்குள் நுழையும் பொழுதெல்லாம் கவனித்திருக்கிறேன் உன் நெற்றியில் அரும்பும் வியர்வை மழையினை என் விழி வேர்களால்! * பொய்யாக எதையேனும் சொல்லி்க்கொண்டிருக்கும் பொழுதுகளில் அதில் சுவாரஸ்யங்களை தேடும் உனது விழிகளுக்காக இன்னமும் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன் முடிவிலா உண்மையின் பொய்க்காட்சிகளை! * மழை பொழியும் பொழுதுகள் இவ்வளவு ரம்மியமானவை என்று எனக்கு தெரியவே இல்லை சத்தியமாக. ஆமாம்: அன்று நீ என் கைகள் கோர்த்து கண்கள் பார்த்து உதடுகள் வியர்த்த அந்த தருணம் வரையிலும்!